பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பனியின் துளியைப் போல் குளுரும் பருவம்
நெருப்பின் துண்டைப் போல் ஒளிரும் பருவம்
கனவும் இலவசமாய் காணும் பருவம்
இரவின் தூக்கத்தில் உருளும் பருவம்
உயிராகவே உனை நினைக்கிறேன் எனை மறக்கிறேன்
பிழைப்பதே உன் மூச்சிலே
உன் ஆசைகள் உன் எண்ணங்கள் அறிந்தேனேடா
உன் இசை தரும் உன் பாட்டிலே
ஏதேதோ சொல்ல தான் என்னுள்ளே வார்த்தைகள்
முட்டி மோதும் ஆனால் பயம் i love you என்கின்றதே
நீ சொல்லும் வார்த்தை போதும் காதுக்குள்ளே தேனே பாயும்
இந்நாளில் தானே நானே கண்டேன் நெஞ்சுக்குள்ளே காதல் காயம்
கனவு இன்று தான் நிஜமானது
வலி தீர்ந்தது எனை உனை கை சேர்த்தது
ஒரு நாடகம் மிக மெளனமாய் அரங்கேறுது
இல்லையென்று யார் சொன்னது
என் பின்னால் நீ நின்றாய் என் போட்டி நீ வென்றாய்
ஒரு பக்தன் போல பூஜை செய்ய அன்பே நான் வரலாமா?
சரியென்று சொல்வேன் நானே நான் இன்று யாரோ ஆனேன்
கில்லாடி நீயே ஆடிப் பாடி மாயம் செய்து என்னை வென்றாய்
படம் : வெற்றி
பாடியது : கார்த்திக்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
1 comment